Latest News
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தகவல்.
அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் கலந்துரையாடாமல் பாதுகாப்பு செயலாளரான தனது சகோதரர் மற்றும் தனக்கு நெருக்கமான அமைச்சர்களுடனும் மாத்திரம் கலந்துரையாடி வருகின்றமை தொடர்பாக கட்சிக்குள் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக...மேலும்
சிங்கள மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தமிழ்மொழிக்குத் துரோகம் இழைத்து விட்டோம் – டலஸ் அழகப்பெரும.
சிங்கள மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தமிழ்மொழிக்குத் துரோகம் இழைத்து விட்டோம் என்று இலங்கை அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதியின் மிகவும் நம்பிக்கைக்குரிய அமைச்சர்களில் ஒருவராகக் கருதப்படும் டலஸ் அழகப்பெரும...மேலும்
தமிழர் விடயத்தில் கரிசனை கொள்வதுபோல் இந்தியா நடிப்பதாக சிறிதுங்க ஜயசூரிய குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கை சீன உறவை துண்டிப்பதற்குப் 13 பிளஸைப் பகடைக்காயாகப் பயன்படுத்தி தீவிரமாக செயற்படும் இந்தியா, தமிழர் விடயத்தில் கரிசனை கொள்வதுபோல் நடிப்பதாக ஐக்கிய சோஷலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...மேலும்
இலங்கையின் வாக்குறுதிகள் திருப்தி அளிப்பதாக இந்தியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் நிலைத்து நிற்கக் கூடிய காத்திரமான அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அதீத அக்கறை காட்டி வருவதாகத் தெரிவித்துள்ள இந்தியா, அமைதித் தீர்வு தொடர்பாக இலங்கையின் வாக்குறுதிகள் திருப்தி அளிப்பதாகவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவுக்கான இந்தியத் தூதுவராக நியமனம்பெற்றுச்...மேலும்
சவேந்திர சில்வா ஐ.நா. சபையின் அமைதி காக்கும் படைக்கான உயர் பதவியொன்றுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதியாக கடமையாற்றும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைக்கான உயர் பதவியொன்றுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படை தொடர்பான தீர்மானங்களை எடுக்கும்...மேலும்








