Latest News
வடக்கு, கிழக்கை இராணுவ மயமாக்கும் நடவடிக்கையை அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும் – பாக்கியசோதி சரவணமுத்து.
வடக்கு, கிழக்கை இராணுவ மயமாக்கும் நடவடிக்கையை இலங்கையின் தற்போதைய அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து வலியுறுத்தியுள்ளார். அதேவேளை கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும்...மேலும்
எந்தவித நிபந்தனைகளும் இன்றி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதாக மஹிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளார் – அனோ பொன்சேகா.
எந்தவித நிபந்தனைகளோ, கட்டுப்பாடுகளோ எதுவும் இன்றி முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளார் என்று அவரது பாரியார் அனோ பொன்சேகா தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனநாயக தேசிய முன்னணியின்...மேலும்
மகசீன் சிறைச்சாலை தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இலங்கைத் தலைநகர் கொழும்பின் பொரள்ளை பகுதியில் அமைந்துள் மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், இன்று காலை முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு எந்தவித சட்ட நடவடிக்கையும்...மேலும்
இறுதிக் கட்ட போரின் போது சரணடையாத புலி உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் மறைந்து வாழ்கின்றனர் – கோட்டாபய.
இறுதிக் கட்ட போரின் போது இராணுவத்தினரிடம் சரணடையாத தமிழீழ விடுதலைப் புலி இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், மக்கள் மத்தியில் மறைந்து வாழ்ந்து வருவதாக இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாளாநதம் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டு வருவதாகவும்...மேலும்
வன்னிப் பகுதியில் மீண்டும் பாரிய தேடுதல் சோதனை நடவடிக்கைகளை படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு உட்பட வன்னிப் பகுதிகளிலும் மீண்டும் பாரிய தேடுதல் சோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள அரச படையினர் இளைஞர், யுவதிகளை கைது செய்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. படையினரின் இந்த நடவடிக்கைகள் தொடர்பாக பல முறைப்பாபடுகள் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின்...மேலும்







